சூடான செய்திகள் 1

டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட அழைப்பை ஏற்று இராப்போசன விருந்தில் ஜனாதிபதி பங்கேற்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள அனைத்து அரச தலைவர்களுக்கும், அமெரிக்க ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரம், கூட்டதொடருடன் இணைந்ததாக நியூயோர்க் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இராப்போசனத்திற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் விசேட அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அவரின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் வரவேற்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஞானசார தேரர் குறித்த முக்கிய தீர்ப்பு இன்று

சப்ரகமுக பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு சவுதி அரசாங்கத்தின் உதவி

இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு