உள்நாடு

டிப்பர் வாகன விபத்து – மற்றொரு பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

(UTV|மாத்தறை )- மாத்தறை – ஹக்மனை பகுதியில் இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி மாத்தறை ஹக்மனை பகுதியில், டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன். மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த பொலிஸ் அதிகாரி மாத்தறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பொலிஸ் அதிகாரி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை காயமடைந்த மற்றைய பொலிஸ் அதிகாரி குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மே மாதம் சமர்பிக்கப்படவேண்டிய மின் கட்டண திருத்தம் எங்கே? தாமத்தப்படுத்துவதன் நோக்கம் என்ன? ஆணைக்குழு கேள்வி

ரேஷன் முறையில் எரிபொருளை வழங்க யோசனை

சஜித்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன் எம்.பி கோரிக்கை

editor