டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 43,991 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, இந்தக் கடுமையான வானிலை தொடர்பான சம்பவங்களால் 56 பேர் உயிரிழந்துள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நான்கு வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், 666 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
