உள்நாடு

டாக்டர் மகேஷி விஜேரத்னவின் பிணை மனு ஜூலை 4 இல் விசாரணை!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் ஜூன் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஸ்ரீஜெயவர்தனபுர மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்ன தாக்கல் செய்த பிணை மனுக்களை ஜூலை 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பரிசீலிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீஜெயவர்தனபுர மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன, ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனை நிர்வாக உதவியாளர் கெகுலந்தல லியனகே இந்திகா மற்றும் மருத்துவரால் சட்டவிரோதமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த முத்துக்குடா ஆராச்சிகே நிமல் ரஞ்சித் முத்துக்குடா ஆகிய மூன்று பேரை ஜூலை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஜூன் 24 ஆம் திகதி கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, உத்தரவிட்டார்.

Related posts

அரசியல்வாதிகள் ஏன் மோசமாக நடந்துகொள்கிறார்கள் – மஹிந்த தேசப்பிரிய

வசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

editor