ஜம்மு – காஷ்மீரில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 200 பேர் மாயமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மீட்பு நடவடிக்கையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், துணை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் மலையின் அடிப் பாகத்தில் இருந்து வீடுகள், கடைகள் போன்றவை இடிபாடுகளில் சிக்கி புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.