அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2460 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை) 2,460 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 930 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,530 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 62 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் விருது வழங்கும் நிகழ்வு: Hima Consultants & Construction நிறுவனத்துக்கும் சிறப்பு விருது.

நசுங்கும் இலங்கை : வேலைவாய்ப்புக்களை இழக்கும் நிலை

முஸ்லிம் அமைச்சர்கள் இல்லையென அதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள் – அமைச்சர் விஜித ஹேரத்

editor