உள்நாடு

ஜனாதிபதி இன்று இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

பாராளுமன்றம் பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கான ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நிதி அமைச்சராக ஜனாதிபதி விக்கிரமசிங்க வழங்குவார்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியதன் பின்னர் அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2022 வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இம்மாத முற்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்தார்.

அதன்படி, 2022 நிதியாண்டின் எஞ்சிய காலத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் புதிய அரசாங்கமாக 2021 டிசம்பரில் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் திருத்தமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம்

துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது – ACJU

TRC அங்கீகாரம் இல்லாத கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய மென்பொருள்

editor