உள்நாடு

ஜனவரி 60 முதல் ஓய்வூதியம் பெறும் சட்டம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65ல் இருந்து 60 ஆக குறைக்கும் யோசனையை 01.01.2023 முதல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமைத்து அதனை 01.01.2023 முதல் நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கைகள் மற்றும் பணிப்புரைகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related posts

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்

வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் அவதி

editor

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான விசேட அறிவித்தல்!