வகைப்படுத்தப்படாத

சைட்டம் எதிர்ப்பு பேரணிக்கு தடைகோரிய மனு நிராகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான பேரணிக்கு தடைவிதிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம், இன்று நிராகரித்துள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு பொலிஸார், நீதிமன்றத்தை கோரியிருந்தனர்.

கொழும்பு, கறுவாத்தோட்ட பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை – பிரதமர்

தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி