அரசியல்உள்நாடு

செவிப்புலனற்ற முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் கன்னி உரை

இலங்கையின் செவிப்புலன் அற்ற முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று (6) பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

அவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில், 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளியொருவர் இலங்கை பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரச தரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகத் வசந்த டி சில்வா தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

Related posts

மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து, சிறப்பு பாதுகாப்புத் திட்டம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு

மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி