உள்நாடு

சென்னை நோக்கி விஷேட விமானம்

(UTV |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானமொன்று இன்று(12) காலை சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

சென்னையில் சிக்கியுள்ள 305 இலங்கையர்களை அழைத்து வருவதற்காக யு.எல் 1121 என்ற விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து காலை 7.25 மணியளவில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து இன்று(12) மு.ப 11 மணியளவில் மீண்டும் இலங்கையை வந்தடையவுள்ளது.

Related posts

சஹ்ரான் சங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்தவேளை 616 மற்றும் 623 வது அறைகளில் தங்கியிருந்தவர்கள் யார் (VIDEO))

டிஜிட்டலுக்கு மாறும் பயணச் சீட்டுகளுக்கான விநியோக முறை.

இன்றும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று