உள்நாடு

சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை

(UTV|காலி )- ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனவடுன பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு(09) மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி பெண்ணை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வற்காக ஹபராதுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

துசித ஹல்லொலுவவின் பிணை மனு நிராகரிப்பு – விளக்கமறியல் நீடிப்பு

editor

கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறையில் தொலைபேசிகள்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

editor