உள்நாடுசூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று(16) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு 7 மணியளவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொது தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலை குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடாகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு நியமனம்

தரச் சான்றிதழ் இல்லாத ஆபரணங்கள் விற்பனை குறித்து விரைவில் கடுமையான சட்டம்

சிலாபத்தில் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மீட்பு!

editor