சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.49 மணியளவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந் நிலநடுக்கத்தின்போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
சுமார் எட்டு வீடுகள் இதன்போது இடிந்து விழுந்துள்ளதோடு, 100 இற்கும் அதிமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 43 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.