உள்நாடுவணிகம்

சீனாவிடமிருந்து நன்கொடையாக 10 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி

(UTV | கொழும்பு) – பத்து இலட்சம் மெட்ரிக் டொன் அரிசித் தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் குறித்த அரிசித் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்று மேலும் 414 பேருக்கு கொரோனா உறுதி

மசாலா பொருட்களுக்கும் இனி இணையத்தள வசதி

பெரன்டிக்ஸ் கொவிட் கொத்தணி – விசாரணை செய்ய புதிய குழு நியமனம்