உள்நாடுசூடான செய்திகள் 1

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(UTVNEWS | கொவிட் 19) -கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள 21 மாவட்டங்களிலும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதுவரை இரவு 8 மணிதொடக்கம் அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் இந்த மாவட்டங்களில் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து 27ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீக்கப்பட்டுள்ளது.

Related posts

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில்

சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கை வருவதற்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சர்.

யுகதனவி அடிப்படை மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு