உள்நாடு

சிறுவர் மீதான வன்முறை முறைப்பாடுகள் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 800 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்காக, தௌிவூட்டும் நிகழ்வுகளை பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் முதித்த விதானபத்திரன கூறியுள்ளார்.

Related posts

ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம் – ஜீவன் தொண்டமான் விளக்கம்.

இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புசட்டமூலம் குறித்து அமெரிக்க தூதுவர் விமர்சனம்!