உள்நாடு

சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகைக்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் சினோபாம் முதலாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள், தாம் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையங்களிலேயே இரண்டாவது தடுப்பூசியையும் ஜூன் மாதத்தில் உரிய திகதிகளில் பெற்று கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

எத்திஹாத் விமான சேவைகள் நிறுத்தம்

டிசம்பரில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு

தீர்வு கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாது