உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து

( UTVNEWS| COLOMBO) –கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கி வந்த சாய்ந்தமருது பிரதேசம் தனியான நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

குறித்த அதிவிசேட வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழமை (14) பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சையால் அந்த அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் மீளப்பெறப்பட்டுள்ளது.

இந்த தகவலை அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று (20) காலை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

Related posts

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியல்

ஜே.வி.பியினர் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி உணவு உட்கொண்டுள்ளனர் இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – நாமல் எம்.பி

editor

அலி ரொஷானுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி முதல் தொடர் விசாரணை