அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பி யிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இன்று (03) வாக்குமூலம் பெற்றுள்ளது.

அதன்படி, அந்தப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து 4 மணி நேர வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை போஸ்போட் நிறுவனத்தின் ஊடாக கடந்த காலகட்டத்தில் ஏற்றுமதிக்காக மூன்று நிறுவனங்களுக்கு முப்பதாயிரம் மெட்ரிக் டன் ரோக் பேஸ்பேட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2,700 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பதில் பணிப்பாளர் சுஜீவ விஜேசேனவின் அறிவுறுத்தலின் பேரில் முன்னெடுக்கப்படுகிறது.

Related posts

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்.

பலத்த காற்று வீசும், கடல் கொந்தளிப்பாகவும் இருக்கும் – தயவு செய்து எச்சரிக்கையாக இருங்கள்!

editor

ஓய்வூதியத்தை எதிர்பாத்திருந்த 2000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குங்கள் – வன்னி எம்.பி துரைராசா ரவிகரன்

editor