விளையாட்டு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச்

(UTV |  ஜெனீவா) – ஜேர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார். ஆன்லைன் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் நடந்தது. அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தாமஸ் பேச், கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23ம்  திகதி தொடங்கும் என்று மீண்டும் உறுதிப்பட கூறினார்.

Related posts

சர்வதேச கிரிக்கட் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த தீர்மானம்

ஐந்தாவது தடவையாகவும் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருது லயனல் மெஸிக்கு

இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய முகாமையாளர்