உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணம்!

சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதோடு, மரணமடைந்தவர் சம்மாந்துறை, சென்னல்கிராமம் 02 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு

IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் ஜனாதிபதி ரணில்

கோடீஸ்வர வர்த்தகர் கைது – பிரபல நடிகை பியூமி ஹன்சமாலிக்கு சிக்கல்.