உள்நாடு

சம்பாயோ உட்பட 4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | நீர்கொழும்பு ) – கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உட்பட நால்வர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கியமை மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, அவர்களை இன்று நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Related posts

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்தனர்

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்

ஐ.சி.சி. கூட்டத்தில் கால அவகாசம் வழங்குமாறு – ஷம்மி சில்வா வேண்டுகோள்