அரசியல்

சம்பந்தனுடைய வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடைய இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது நிலையில் இருக்கின்ற சண்முகம் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 02.07.2024 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் கூடுகின்ற பாராளுமன்ற அமர்வின்போது அவர் சபாநாயகரின் முன்னிலையில் சத்தியப்பிரமானம் மேற்கொள்ளவுள்ளார்.

Related posts

ஜனாதிபதிக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor

தொகுதி அமைப்பாளர்களின் பதவி விலகல் குறித்து உண்மையை வெளியிட்ட மரிக்கார் எம்.பி

editor

இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா கவனம்

editor