உள்நாடுபிராந்தியம்

சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் பெண்ணொருவர் மரணம் – ஓட்டமாவடியில் சோகம்

சமயல் எரிவாயு கசிவு சம்பவத்தில் பெண்ணொருவர் இன்று புதன்கிழமை (10) மரணமடைந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி -1 அரபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஏ.எம்.உம்மு ஹதீஜா என்பவரே மரணமடைந்துள்ளார்.

இவர், கடந்த வியாழக்கிழமை 4 ஆம் திகதி காலை வேளையில் தேனீர் தயாரிப்பதற்காக எரிவாயுவை பயன்படுத்திய போது அதன் வயர் வெடித்து இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் எரிகாயங்களடைந்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

யாழ்.குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில்