78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சுதந்திர தின நிகழ்வு இன்றையதினம் (04) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இரத்தினபுரி மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சாந்த பத்மகுமார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஜனக்க சேனாரத்ன, சுனில் ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனிதா, ஆளுநரின் செயலாளர் சஞ்ஜீவ கொடெல்லவத்த, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்
