உள்நாடு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மீண்டும் பூட்டு

(UTV | கொழும்பு) – சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (07) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மூன்றாவது கச்சா எண்ணெய் கப்பலின் கையிருப்பை இறக்க முடியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் போதிய எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

இனி இலங்கை மக்களின் வருமானத்தில் பெருக்கம் ? அரசு வெளியிட்டுள்ள நம்பிக்கை

19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்

அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு ஐ.நா குழு கோரிக்கை