உள்நாடு

சந்தேகத்தின் பேரில் கைதானோரில் இருவருக்கு பிணை [VIDEO]

(UTV | BATTICALOA) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹித் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 63 பேரில் இருவர் இன்று(31) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய 61 பேருக்கு ஜனவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹித் ஜமாத் தலைமையகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நகர, மாநகர மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலம் நீடிப்பு

பெட்ரோல் கப்பல் இந்த வாரம் இலங்கைக்கு

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ETF – EPF தொடர்பில் அரசு நடவடிக்கை