உள்நாடு

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிள் செய்த குற்றச்சாட்டின் பேரில் வைக்கால பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் ரங்கம்முல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டதுடன், உதிரிபாகங்களாகக் கொண்டு வரப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுசேர்க்கப்பட்ட மூன்று PCX மோட்டார் சைக்கிள்கள், ஆறு மோட்டார் சைக்கிள் என்ஜின்கள், அரைகுறை மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

சந்தேக நபருடன் தொடர்புடைய சட்டவிரோத இறக்குமதி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் உட்பட மேலதிக குற்றங்களை வெளிக்கொணர வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனவரி முதல் மின் கட்டண கொடுப்பனவுகள் காகிதத்தில் இல்லை? – டிஜிட்டல் முறையிலா?

புதிய சுகாதார ஊழியர்களுக்கு விசேட பயிற்சி – சுகாதார சேவைகள் பணிமனை.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – தென்னகோன் தலைமறைவாகாமல் சரணடைய வேண்டும் – அர்ஜூன மகேந்திரனை வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வருவோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor