உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோத சிகரெட்களுடன் இருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது!

சட்டவிரோத சிகரெட்டுக்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்  இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்  சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஏ .டபிள்யூ. எஸ். நிசாந்த வெதகேக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 4,601 சட்டவிரோதமாக சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகினர்.

நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில்  பொலிஸ் சார்ஜன்ட்  (36937) பண்டார, பொலிஸ் கான்ஸ்டபிள்  (29752) இசுறு உட்படலான பொலிஸ் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில்  இரண்டு சந்தேக நபர்களுடன் பெருந்தொகையான இந்த சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன்   சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கைதான சந்தேக நபர்களையும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

பெசில் ராஜபக்ஷ தலைமையில் பெரமுனவின் கட்சிக் கூட்டம் ஆரம்பம்

நாடாளாவிய ரீதியில் 12 தடுப்பு மத்திய நிலையங்கள்

அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை