உள்நாடுசூடான செய்திகள் 1

சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக ஆணைக்குழு சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார் .

பாராளுமன்றக் கலைப்பு மற்றும் ஜூன் 20 பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் இதுவரை 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுத் தேர்தல் நடத்தும் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மே மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆர்ஷிக்கின் இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாத்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்தியசாலைகள்