உள்நாடு

“சட்டத்தின் மீதான பயம் நீங்கியது”

(UTV | கொழும்பு) – நாட்டின் சட்டத்தின் மீதான அச்சம் சமூகத்தில் படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்துகின்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தின் ஆட்சி முறையாகச் செயற்படுகிறதா என்ற பிரச்சினை தற்போது ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் திறனைக் குறைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் முறை துரிதப்படுத்தப்படுமானால், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறைவதற்கு அது காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜப்பானிய நிதியுதவி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

editor

தேசபந்து தென்னகோன் தற்போது தலைமறைவாக உள்ளார் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்