சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த உயர் தர பரீட்சையின் விடைத்தாள்கள் மீள்மதிப்பீடு மிக விரைவில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்ததன் பின்னர் பெறுபேறுகள் வெளியானதும், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

வெள்ளத்தால் முல்லைத்தீவு மக்கள் அவதி!

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

editor