உள்நாடு

‘கோட்டா நாடு திரும்ப இது நல்ல தருணம் அல்ல’ – ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்பினால் அது நாட்டில் மேலும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என தமக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Related posts

UPDATE : மேலும் இரு பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

ஐஸ் விவகாரம் – பொலிஸ் நிலையம் சென்ற முன்னாள் எம்.பி விமல் வீரவன்ச

editor

ஏமாற்றம் அடைந்துள்ள அரச ஊழியர்கள் – அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor