உலகம்சூடான செய்திகள் 1

கொவிட் 19 வைரஸ் -உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV|சீனா)- கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1868 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொவிட் 19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 93 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 1789 பேர் உயிழந்துள்ளனர்.

அதேநேரம் குறித்த தொற்றால் அங்கு 1807 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அந்த பிராந்தியத்தில் இதுவரை 59 ஆயிரத்து 989 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட் 19 தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 862 பேர் சிகிச்சைகளின் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

முகப்புத்தகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட காதலால் நடந்த விபரீதம்

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் ரிஷாத்