உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு

(UTV|கொவிட்- 19)- கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 703 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதம் 23ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது.

கங்காராம வெசக் நிதியத்திலிருந்து 10 மில்லியன் ரூபாவும் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் சங்கம் அன்பளிப்பு செய்த 2.5 மில்லியன் ரூபாவை கலாநிதி சங்கைக்குரிய மல்வானே சந்திரரத்ன தேரர் நேற்று(16) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் 2.5 மில்லியன் ரூபா, எஸ்.டீ அமரசிங்க ஒரு மில்லியன் ரூபாவையும், ஹுவாவி டெக்னொலொஜீஸ் பிரைவட் லிமிடற் நிறுவனம் 1.5 மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தனர்.

Related posts

சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் – சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

editor

சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத்தின் வாழ்த்து…

நிலைமையினை வழமைக்கு கொண்டுவர இயன்றளவு ஒத்துழையுங்கள்