உள்நாடு

கொழும்பு – ஹொரணை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – ஹொரணை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புளத்சிங்ஹல பகுதியிலிருந்து ஹொரணைக்கு புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன குறிப்பிட்டார்.

அதற்கமைய, ஹொரணையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு மற்றும் சாதாரண சேவை பஸ்களின் ஊழியர்கள் அனைவரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!

அழைத்துச் செல்லப்பட்ட குணசிங்கபுர யாசர்களுக்கு புனர்வாழ்வு

தயாசிரி ஜயசேகரவிடம் 200 மில்லியன் நஷ்ட ஈடு கோரியுள்ள அமைச்சர் பிரசன்ன.

editor