அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) மாலை 4.00 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐந்து சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதற்கான ஆதரவைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என்று அரசாங்கக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

தனியார் வகுப்புக்கு செல்ல பணம் இல்லாததால் உயிரை மாய்த்த சிறுமி!

கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது

editor

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இராஜினாமா