சூடான செய்திகள் 1

கொழும்பு நகரில் புதிய நீர் விநியோகத்திட்டம்

(UTV|COLOMBO)-களனி கங்கையின் தெற்கு பிரதேசத்திற்கு நீரை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்கீழ் கம்பஹா மாவட்ட மக்களுக்கு தேவையான நீர் வியோகம் இடம்பெறும் என அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான முகாமையாளர் பியல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகருக்கு புதிய நீர் விநியோகத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என்றும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களனி கங்கையின் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மணல் வேலியும் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கென 24 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது

கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு; சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு