உள்நாடு

கொழும்பு – இராஜகிரியில் தீ விபத்து

கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்கு அருகில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு வரையும் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

“ முஸ்லிம்களுக்கு ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளது” ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து

ஆசிரிய சேவைக்குப் புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு!

புதிய மின்சார சட்டம்: ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைத்து, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் : சஜித் குற்றச்சாட்டு