சூடான செய்திகள் 1

கொழும்பில் 21 மணித்தியால நீர்வெட்டு

(UTV|COLOMBO) அவசர திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளில், இன்று (13) 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (13) காலை 8 மணிமுதல் நாளை மறுதினம் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய மற்றும் ரெக்மல்கம உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், பெலேன்வத்த, மத்தேகொட, ​ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க உள்ளிட்ட இடங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

மீண்டும் சமூகவலைத்தளங்கள் முடக்கம்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு