உள்நாடுபிராந்தியம்

கொழும்பிலிருந்து சென்ற பொலிஸாரால் நீலாவணையில் துப்பாக்கி மீட்பு!

ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள   புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் செய்யப்பட்ட கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி 2 மெசீன்கள் என்பன மீட்கப்படடன.

கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழுவினர் சனிக்கிழமை (22) மாலை குறித்த துப்பாக்கியை எடுத்துச் சென்றிருப்பதாக நேரில் கண்டவர்கள்  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி  ஏதாவது குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது கடந்த காலங்களில் அப்பகுதியில் இயங்கிய ஆயுதக் குழுக்களிடம் கொள்வனவு செய்யப்பட்டதா என மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த ஒருவர் 7 வருடங்களாக  காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  சட்டவிரோதமாக தனது தந்தை இவ்வாறு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததை மகன் அறிந்து  அதனை உத்தியோகபூர்வமாக  அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு  ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியை கடிதம் ஊடாக அணுகியுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தின் குறித்த பிரிவின் பணிப்புரைக்கமைய கொழும்பில் உள்ள  பொலிஸ் குழுவினர் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள வீட்டுக்கு இது தொடர்பில் கடிதம் ஊடாக அறிவித்த நபருடன் வருகை தந்து துப்பாக்கியை எடுத்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சந்தேககிக்கப்படும் நபர் விமான ரிக்கட் மற்றும் விசா வழங்குதல் தொடர்பான உப  முகவராக செயற்பட்டுள்ளதுடன் தெரிய வந்துள்ளது.

-பாறுக் ஷிஹான்

Related posts

மனோ கணேசன் எம்.பியை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

editor

IMF குறித்து அனுரவின் நிலைப்பாடு

editor

எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் – பிரதமர் ஹரிணி

editor