உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் நாளை(18) நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை(18) காலை 08 மணி முதல் மாலை 06 மணிவரையான காலப்பகுதிக்குள் கொழும்பு 13,14 மற்றும் 15 அகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 11,12 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் வழங்கும் குழாயின் திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

சீனா – இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கும் பாரிஸ் கிளப்

அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது – விமர்சிக்கும் மக்களை அச்சுறுத்தி, வாய்களை மூடச் செய்கிறது – சஜித் பிரேமதாச

editor

அரசாங்கம் வெளிப்படையாகத் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகிறது – முன்னாள் எம்.பி சுமந்திரன்

editor