உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளுக்கு 20 மணிநேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று(06) கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தளையில் இருந்து கொலன்னாவை வரையில் நீரை கொண்டு செல்லும் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக குறித்த நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.

இதற்கமைய, கொலன்னாவை நகர சபை, இராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 20 மணி நேர காலப்பகுதிக்கு நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ரணிலின் அரசாங்கம் தயாரித்த புலமை பரிசில் பரீட்சை வினாத்தாளை வெளியிட்டது யார் அநுர ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

நீதிமன்றத்தை அவமதித்ததாக மைத்திரிக்கு எதிராக மனு

editor

எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு குறித்து இன்று தீர்மானிக்கும்