உள்நாடுபிராந்தியம்

கொலையில் முடிந்த வாக்குவாதம் – ஒருவர் கைது

ஹங்குரான்கெத்த, ஹேவாஹெட்ட பகுதியில் ஒருவர் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு, பின்னர் அணைக்கட்டு ஒன்றில் தள்ளிவிடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் ஹெவாஹெட்ட நகரில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது மற்றொரு நபருடன் கூடிய குழு இந்தக் கொலையைச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் ஹேவாஹெட்டவைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹங்குரான்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சம்பள உயர்வு அல்லது 20 ஆயிரம்- நாடளாவியரீதியில் போராட்டம்

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் குடியுரிமையை இரத்து செய்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் – துமிந்த நாகமுவ

editor