உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(08) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,935 ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது 176 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 3,123 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர நியமனம்

editor

அசாத் சாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

சர்வதேச நாணய நிதியத்துடனான மீளாய்வு கூட்டம் தோல்வி – செஹான் சேமசிங்க தலைமையில் குழு.