உள்நாடுபிராந்தியம்

கொத்மலையில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்ஸின் பாகங்கள் மீட்டெடுப்பு

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ்ஸின் பாகங்கள் பள்ளத்திலிருந்து மீட்டெடுத்து கொண்டுவரப்பட்டுள்ளன.

பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கிரேன் உதவியுடன் இந்தப் பேருந்தின் பாகங்களை மீட்டுள்ளனர்.

பின்னர் குறித்த பஸ்ஸின் பாகங்கள் மேலதிக விசாரணைக்காக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது

பெரும்பான்மைக்கு செவிசாய்த்தே நாட்டை முடக்காது இருக்கிறோம்

தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து, மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜீவன் தொண்டமான் பணிப்புரை