வகைப்படுத்தப்படாத

கேரளா மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்வு

(UTV|INDIA)-கேரளா மாநிலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் மாலை மழை சற்று குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது.

வடமேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை பெய்துவருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என்று புதிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை, வெள்ளம், நிலச் சரிவுகளில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வேறு இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.

10 கம்பெனி ராணுவத்தினர், சென்னை ரெஜிமென்டை சேர்ந்த ஒரு குழுவினர், கப்பல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகிய வற்றை சேர்ந்த வீரர்கள் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கோழிக் கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மீட்பு பணிகள் நடைபெறுகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை மந்திரி ராஜ் நாத்சிங் பார்வையிட்டு உடனடி நிவாரணமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணையில் இருந்து நேற்றும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் துணை அணையான செருதோனி அணையில் 5 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறுவதால் ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

60 வெளியுறவுத் துறை அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை?

‘ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’ ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்!

கைத்தொழில் உற்பத்திச் சுட்டென் 1.8 சதவீதத்தினால் அதிகரிப்பு