உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்

அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் 40 வயதுடைய பெண்ணொருவர் குடும்ப தகராறினால் நேற்று வியாழக்கிழமை (07) இரவு அவரது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெதயெல்ல வாவி பகுதியைச் சேர்ந்த பெண்ணே கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நீண்டகால குடும்ப தகராறில் நடந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மக்களுடன் சுமூகமான முறையில் உரையாடிய ஜனாதிபதி அநுர

editor

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பணிப்பெண்கள்

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் கொடுப்பனவு வழங்க கோரிக்கை