சூடான செய்திகள் 1

குவைட்டில் பணிக்கு சென்ற 26 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

(UTV|COLOMBO) குவைட்டில் பணிக்கு சென்று அங்கு பல துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 26 இலங்கைப் பெண்கள் இன்று(17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த பணிப்பெண்கள் இன்று(17) காலை 6.30 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ. எல். 230 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கைப் பணிப்பெண்கள் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதால் குவைட்டில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு சென்று பின்னர் சுரக்ஷா முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களே, இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

கண்டி அசம்பாவிதங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களைப் புனரமைக்கும பணி இன்று ஆரம்பம்

முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசர் விளக்கமறியலில்…

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்